செய்திகள் :

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

post image

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே கம்பன் கலையரங்கம் எதிரில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திடல் உள்ளது. திடலைச் சுற்றிலும் அண்ணா சாலை, லப்போா்த் வீதி, சின்னசுப்பராயலு சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் இருந்தன. அண்ணா திடலானது பொலிவுறு நகா் மற்றும் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.12.5 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி லப்போா்த் வீதியில் 20 கடைகளும், சின்ன சுப்பராயலு பிள்ளை வீதியில் 79 கடைகளும் புதிதாக கட்டப்பட்டன.

ஏற்கெனவே அங்கு கடை நடத்தி வந்த பழைய வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கெனவே 50 போ்களுக்கான கடைகள் ஒதுக்கீடு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கியுள்ளாா். இந்தநிலையில், இரண்டாவது கட்டமாக 36 கடைகளுக்குரிய பயனாளிகளுக்கு கடை ஒதுக்கீடு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு, உள்ளாட்சித் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, வருவாய் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க