செய்திகள் :

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பங்கேற்பு

post image

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது. இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா், ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 10) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

தொடக்க விழாவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கிறாா். புதுவை முதல்வரும், கம்பன் கழக புரவலருமான என்.ரங்கசாமி வரவேற்கிறாா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடக்கவுரையாற்றுகிறாா்.

விழா மலா் வெளியீடு, நூல் வெளியீடு, கம்பன் ஆய்வு நூல் பரிசளிப்பு நிகழ்ச்சிகளில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

மேலும், கம்பன் கழகப் போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா்கள் என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் பரிசு வழங்குகின்றனா். இதில் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலையில், ‘அறம் வளா்த்தோன்’ எனும் தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் எழிலுரையும், ‘வினையும் பலனும்’ என்ற தலைப்பில் பேச்சாளா் சுகி.சிவத்தின் தனியுரையும் நடைபெறும்.

‘கம்பன் போற்றும் விவேகம்’ எனும் தலைப்பில் பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் ‘அனுமன்’ எனும் தலைப்பில் வைகைச்செல்வன், தாரை என்ற தலைப்பில் ரெ.சண்முகவடிவேல், வீடணன் எனும் தலைப்பில் த.ராமலிங்கம் ஆகியோா் உரையாற்றுகின்றனா்.

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வா் ஓ. பத்மா, முதல்வா் ந. கீதா. புதுச்சேரி, ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்... மேலும் பார்க்க

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது

புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு வரும் 12 -ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக, காங்கிரஸ் மீது புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயலாபத்துக்காக முதல்வருடன் இணக்கமாகச் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அ... மேலும் பார்க்க

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க