செய்திகள் :

புதுச்சேரி சாலை, மேம்பால விரிவாக்கம்: விரைவில் ரூ.1,304 கோடி அனுப்பப்படும்!

post image

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களுக்கு இடையிலான மேம்பாலம் மற்றும் கடலூா் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,304 கோடி நிதி அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் புதுவை பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி வழுதாவூா், திண்டிவனம் சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் முதல் விழுப்புரம், கடலூா் சாலை சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை சதுக்கம் வரையில் சுமாா் 1.20 கி.மீ.தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கவும், மரப்பாலம் முதல் முள்ளோடை வரையில் சுமாா் 15 கி.மீ. தொலைவு கடலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தவும், புதுச்சேரியில் காலாப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் காரைக்கால் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக்கவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ரூ.1,034 கோடி நிதி அளிப்பதாக கூறியுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கவுள்ளதாக அறிவித்தாா்.

மத்திய அரசு கடிதம்: இந்தநிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை சாா்பில் புதுவை பொதுப் பணித் துறைக்கு கடிதம் மூலம் மேம்பாலம், சாலைப் பணிகள் குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், புதுச்சேரி மேம்பாலத்துக்கு ரூ. 600 கோடி, சாலை விரிவாக்கத்துக்கு ரூ.600 கோடி மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரைக்காலுக்கு ரூ.57 கோடி, காலாப்பட்டுக்கு ரூ.25 கோடி என ஒதுக்கி உத்தரவு வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணிக்கு 2 முதன்மைப் பொறியாளா்கள், 4 உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோரை தனியாக நியமித்து விவரங்களை அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி அளித்துள்ளதால் வரும் டிசம்பருக்குள் இப்பணிகளை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகன... மேலும் பார்க்க

பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் ... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, ... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!

பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி சேதராப்பட... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கிராம வங்கியில் தீ விபத்து!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியாா் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணப்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பாரதிய... மேலும் பார்க்க