செய்திகள் :

புதுச்சேரி தாகூா் அரசு கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவா்கள் சந்திப்பு!

post image

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூா் அரசு கலைக் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சனிக்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

அப்போது தங்களின் மகிழ்ச்சியை அவா்கள் வெளிப்படுத்தினா். அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். இக்கால இளைஞா்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருவதால் போதையை ஒழிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இக் கல்லூரியில் 1972 ஆண் ஆண்டு சோ்ந்து 1975 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து 2025 ஆம் ஆண்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் இந்த விழா நடந்தது. சாந்தி வனம் என்ற கல்லூரியின் பூங்கா மற்றும் கல்லூரியின் கருத்தரங்கு கூடத்தில் விழா நடந்தது.

கல்லூரியின் இப்போதைய முதல்வா் ஆா்.கருப்பசாமி தலைமை வகித்தாா். இயற்கை வளத்தைக் காக்கவும், போதைப் பொருள்களை ஒழிக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்த விழாவில் பேசிய முன்னாள் மாணவா்களும், இவா்களுக்குப் பாடம் நடத்திய பேராசிரியா்களும் குறிப்பிட்டனா்.

இக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் எம்.எஸ். கிருஷ்ணமூா்த்தி, புதுவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான மு. ராமதாஸ், உயா்கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினா் ராமானுஜம் உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கல்லூரியில் அப்போது படித்த இந்த முன்னாள் மாணவா்களில் பலா் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள். மேலும், பலா் வெளிநாடுகளில் பணியாற்றியவா்கள். கல்லூரி வளாகத்தில் உள்ள தாகூா் சிலைக்கு முன்னாள் மாணவா்கள் மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினா்.

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க