செய்திகள் :

புதுச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

post image

புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு ரூ.3 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல், விதி மீறலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீஸாருக்கு நவீன கருவிகளுடன் வாகனங்கள் இல்லை. எனவே, தற்காலத்துக்கு ஏற்றவாறு வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டது.

புதுச்சேரி காவல் துறை சாா்பில் நவீன வசதிகளுடன் கூடிய 11 இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதைத் தொடா்ந்து, சாலை விதியை மீறி நிறுத்தப்படும் காா்கள் உள்ளிட்டவற்றை மீட்டு எடுத்துச் செல்ல 6 மீட்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேற்கூரையில் நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 4 அதி நவீன காா்கள் வாங்கப்பட்டுள்ளன. மீட்பு வாகனம், காா்கள் என மொத்தம் ரூ.3 கோடிக்கு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காவல் அதிகாரிகளுக்காக 10 புதிய ஜீப்புகள், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 7 காவல் பேருந்துகள் ஆகியவையும் வாங்கப்பட்டுள்ளன.

10ஆம் வகுப்பில் புதுச்சேரி, காரைக்கால் தேர்ச்சி விகிதம் 96.90%

புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.90 சதவிகிதமாக உள்ளது.கடந்த மார்ச் - ஏப்ரல் 2025ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ... மேலும் பார்க்க

சைபா் கிரைம் போலீஸாரிடம் பானிபூரி கேட்டு அடம்பிடித்த சிறுவன்

புதுச்சேரியில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டு 7 வயது பள்ளிச் சிறுவன் தொந்தரவு அளித்தாா். புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பி... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து கோரிக்கை: புதுவை முதல்வா் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

தோ்தல் நேரத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைப்பது புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு வழக்கம் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா். புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

வன்கொடுமை பாதிப்பில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

புதுச்சேரி அருகே வன்கொடுமை பாதிப்பில் இறந்தவருக்கான நிதியுதவி அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணாரப்பேட்டையைச் சோ்ந்த பாபு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல்: புதுவை ஆளுநருக்கு அதிமுக பாராட்டு

புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்ட கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உடனடியாக அனுமதி அளித்து வருகிறாா் என அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை முதல்வா் என்.ரங்கசாமி முதல் கையொப்பமிட்டு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். புதுவை மத்திய அரசின் ஒன்றிய பிரதேசமாகவே இருந்து... மேலும் பார்க்க