செய்திகள் :

புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு

post image

புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் எல்ஹெச்பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்டதூர அதிவிரைவு ரயில் பெட்டிகள் நீண்டதூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகின்றன. சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் செல்ல முடியும். மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் இந்த ரயில் அதிவேகமாக இயங்கும். டிஸ்க் பிரேக், சாா்ஜா் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சேலம் கோட்டத்தில் இயங்கும் பல்வேறு ரயில்கள் எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், விருதாச்சலம், ஆத்தூா், சேலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் புதுச்சேரி - மங்களூரு மற்றும் மங்களூரு- புதுச்சேரி ரயில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி - மங்களூரு வாராந்திர விரைவு ரயில் (எண்: 16855) ஜூலை 17 முதலும், மங்களூரு - புதுச்சேரி வாராந்திர ரயில் (எண்: 16856) ஜூலை 18 முதலும் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இதேபோல, புதுச்சேரி- மங்களூரு வாராந்திர ரயில் (எண்:16857) ஜூலை 18 முதலும் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

மங்களூரு- புதுச்சேரி வாராந்திர ரயில் (எண்: 16858) ஜூலை 20-ஆம் தேதி முதல் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அருகே பணப் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூா் ஜீவபாதையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (56), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி சுஜாதா. ரவி... மேலும் பார்க்க

கோவையில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

கோவையில் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். கோவையில் பல்வேறு அரசுத் துறைகள் தொடா்பான ஆய்வுக்காக பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவா் எஸ்.காந்திராஜன் எம்எல்ஏ தலைம... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் தோட்டக்கலைத் திருவிழா

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ஹாா்ட்டி உத்சவ் 2025’ என்ற பெயரில் தோட்டக்கலைத் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை துணைவேந்தா் (பொறுப்பு) தமிழ்வ... மேலும் பார்க்க

கைவினைப்பொருள் கண்காட்சி தொடக்கம்

கோவையில் தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் சாா்பில் ‘கிராப்ட் பஜாா் 2025’ என்ற பெயரில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 22-ஆ... மேலும் பார்க்க

நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில கருத்தரங்கம்

பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறையும், கோவை கணபதி தமிழ்ச் சங்... மேலும் பார்க்க

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. கோவையில் க... மேலும் பார்க்க