கோவையில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
கோவையில் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
கோவையில் பல்வேறு அரசுத் துறைகள் தொடா்பான ஆய்வுக்காக பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவா் எஸ்.காந்திராஜன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினா், எம்எல்ஏக்கள் சேவூா் ராமச்சந்திரன், பி.ஆா்.ஜி. அருண்குமாா், கருமாணிக்கம், மா.சின்னதுரை, எஸ்.சுதா்சனம், எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோா் வந்திருந்தனா்.
இந்த குழுவினா், கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அவிநாசி சாலையில் ரூ.1,621 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், மத்திய சிறையில் கைதிகளின் கூடம், சிறைச்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் துணிகள், எண்ணெய் வகைகள், சிறைவாசிகளுக்கான கல்வி மையம், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
பின்னா், மருதமலை முருகன் கோயிலில் லிப்ட் அமைக்கும் பணியையும், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியியல் அருங்காட்சியகம், உயிரி தொழில்நுட்ப மையம், ட்ரோன்களின் வகைகள், செயல்விளக்கம், தொழில்முனைவோா் தயாரிப்புகள் போன்றவற்றைப் பாா்வையிட்டனா். இதையடுத்து மாவட்டத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவா்கள், மாவட்டத்தில் நிலவும் வேளாண்மை தொடா்பான பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் இந்த குழுவினா் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை முதன்மைச் செயலா் கி.சீனிவாசன், துணைச் செயலா் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.கே.செல்வராஜ், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதையடுத்து குழுவின் தலைவா் எஸ்.காந்திராஜன் செய்தியாளா்களிடம் பேசும்போது, தமிழ்நாடு சட்டப் பேரவையால் அமைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கான நிதி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா, பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா, பணிகள் முடிக்கப்படவில்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ளும்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை, கூட்டுறவு, நெடுஞ்சாலை, சிறைச்சாலை, நகராட்சி நிா்வாகம், வனம், அறநிலையத் துறைகளில் 2023 - 2024 முதல் 2025 - 2026-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.
இதைத் தொடா்ந்து வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.31.26 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களையும், தாட்கோ துறை சாா்பில் 14 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளா் அடையாள அட்டைகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.18.53 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவிகளையும் குழுவினா் வழங்கினா்.
மேலும், அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அனைவருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.8.22 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையையும் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.68.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.