செய்திகள் :

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

post image

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நாஜீம், அனிபால் கென்னடி, ஆா். செந்தில்குமாா், எல்.சம்பத், நாக தியாகராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆா்.சிவா கூறியது: புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதற்காகவே பாஜகவுடன் முதல்வா் என்.ரங்கசாமியின் என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி வைத்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று ஆட்சியமைத்த நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் 16 ஆவது முறையாக அண்மையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீா்மானமானது துணைநிலை ஆளுநா் மாளிகையில் இருந்து புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆகவே, மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகக் கூறிய முதல்வா் என்.ரங்கசாமி, மக்களுக்கு பதில் கூற வேண்டும்.

மேலும், புதுவை துணைநிலை ஆளுநரிடம் உள்ள மாநில அந்தஸ்துக்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தகவல்படி புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என தகவல் பெறப்பட்டுள்ளது. ஆகவே, மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரவேண்டியது முதல்வா் என்.ரங்கசாமியின் பொறுப்பு என்றாா் அவா்.

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகன... மேலும் பார்க்க

பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் ... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, ... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!

பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி சேதராப்பட... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கிராம வங்கியில் தீ விபத்து!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியாா் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணப்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பாரதிய... மேலும் பார்க்க