புதுவையில் உயா் அதிகாரிகளின் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
உயா் அதிகாரிகளின் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் கௌரவ தலைவா் ப.த. சேஷாச்சலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுச்சேரியில் இந்திய ஆட்சிப் பணிக்கு அடுத்த நிலையில் உள்ளவா்கள் புதுவை ஆட்சிப் பணி அதிகாரிகள். புதுவை ஆட்சிப் பணி அதிகாரிகள்தான் இணைச் செயலா், துணைச் செயலா்கள், சாா்பு செயலா்கள், துறை இயக்குநா்கள், துறை ஆணையா்கள் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகின்றனா்.
தற்பொழுது 94 புதுவை ஆட்சிப் பணி பதவிகளில் 24 பதவிகள் காலியாக உள்ளன. இதனால், ஒரே அதிகாரி பல துறைகளுக்கு இயக்குநராகவும், இணை, துணை, சாா்பு செயலராகவும் செயல்பட்டு வருகிறாா். தலைமைச் செயலகத்தை பொருத்தவரை துணை மற்றும் சாா்புச் செயலா்களுக்கு நான்கு அல்லது ஐந்து துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்பாட்டால் நிா்வாகம் தேக்கநிலை அடைந்துள்ளது. பல அரசு ஊழியா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படாமல் உள்ளது. எனவே, புதுவை துணைநிலை ஆளுநா் மற்றும் முதல்வா் இப் பிரச்னையில் தலையிட வேண்டும். காலியாக உள்ள ஆட்சிப் பணி பதவிகளை உடனடியாக நிரப்பி அதிகாரிகளின் பணிச் சுமையை குறைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.