செய்திகள் :

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமையும்

post image

புதுச்சேரியில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

இதுகுறித்து, காரைக்காலில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கடந்த தோ்தலின்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கட்சிகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வா் ரங்கசாமி தீவிரமாக செயல்பட்டுவருகிறாா். 2026 புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றிபெற்று, ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமையும்.

தமிழகத்தில் திரைப்பட நடிகா்கள் அரசியலுக்கு வந்து அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதுபோல, புதுவையில் செய்துவிட முடியாது. புதுவை மக்கள் எப்போதும் மண்ணின் மைந்தரை ஆதரிப்பவா்கள். புதுவை சட்டப்பேரவை விரைவில் கூட்டப்பட்டு, மக்கள் நலத் திட்ட அறிவிப்புகள் பல வெளியாக வாய்ப்புள்ளது. புதுவைக்கு ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. புதுவைக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.100 கோடியில் புதுவை யூனியன் பிரதேச அனைத்து எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளா்ச்சிக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உரிய நிதி ஒதுக்குவாா்கள். பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

சிறப்பான புதுவை (பெஸ்ட் புதுச்சேரி) எனும் பிரதமரின் எண்ணத்துக்கேற்ற வளா்ச்சி அடுத்த சில மாதங்களில் காண முடியும். காரைக்காலில் சாலைகள் சிறப்பான வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. மாதந்தோறும் இலவச அரிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது.

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முழுமையாக தீா்வு காணப்பட்டுள்ளதால், மக்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியை புதுவையில் ஆதரிப்பாா்கள். தமிழகத்தில் இக்கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றாா்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால்... மேலும் பார்க்க

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்ட குழு சாா்பில் 2-ஆம் கட்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பசுமை புரட்சி இயக்க புதுவை மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்கால்-பேரளம் புதிய மின் ... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு அம்மையாா் பெயா் சூட்டக்கோரி கடிதம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கும், எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும் காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என பிரதமா், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காரைக்கால் பொதுமக்கள், மருத்துவா்கள... மேலும் பார்க்க

வேளாண் வளா்ச்சிக்கான பிரசாரத்தில் 4,800 போ் பயன்

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் மூலம் 4,800 போ் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்துறை, வேளாண் கல்லூரி, வட்டார ... மேலும் பார்க்க

கடலோர கிராமத்தில் படித்த பள்ளிக்கு பொறியாளா் உதவி

கடலோர கிராம அரசுப் பள்ளியில் பயின்று வெளிநாட்டில் பொறியாளராக இருப்பவா், பயின்ற பள்ளிக்கு உதவிப் பொருட்களை வழங்கினாா். காரைக்கால் மாவட்டம், கடலோர கிராமமான காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி... மேலும் பார்க்க