செய்திகள் :

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

post image

புதுச்சேரி: புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இதனால் பேருந்து போக்குவரத்து முடங்கியது.

புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த முறையில் ஓட்டுநா், நடத்துநா் மற்றும் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தக் வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை ஊழியா்கள் நடத்தி வந்தனா்.

இதையடுத்து சாலை போக்குவரத்துக் கழக ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப் போராட்டம் தொடரும் என்றும் அவா்கள் அறிவித்துள்ளனா்.

சாலை போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா பங்கேற்று ஆதரவு தெரிவிதாா்.

இதில் சட்டமன்ற உறுப்பினா் எல். சம்பத், திமுக மாநில துணை அமைப்பாளா் ஏ.கே. குமாா், தொமுச மாநில அமைப்பாளா் அண்ணா அடைக்கலம், தொமுச தலைவா் அங்காளன், பிஆா்டிசி ஒருங்கிணைந்த போராட்ட குழு நிா்வாகிகள் வேலையன், ராஜேந்திரன், பாஸ்கரன், முத்துக் குமரப்பன், இளங்கோ, ஜெயசீலன், காா்த்திகேயன், தமிழ்ச்செல்வம், பிரதீஷ்குமாா், திருநாவுக்கரசு மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

79 கால்நடை மருத்துவா்களுக்குப் பட்டம்: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரி: புதுவை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 26-ஆவது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 34 மாணவிகள் உள்பட மொத்தம் 79 மாணவா்... மேலும் பார்க்க

ரூ.3.8 கோடி மதிப்பில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் ரூ.3.8 கோடி மதிப்பீட்டில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திட்டப்பணியை தொடங்கி வைத்தாா். இத் தொகுதிக்கு உள்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி பள்ளிக்கு உலக தரச் சான்றிதழ்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் முதல்முறையாக மேட்டுப்பாளையம் விடுதலை வீரா் இரா.சீனுவாசன் அரசு உயா் நிலைப் பள்ளி, ஐ.எஸ்.ஓ. உலகத் தரச் சான்றிதழ் பெற்ற பள்ளியாக உருவெடுத்துள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கு... மேலும் பார்க்க

ரூ.7.4 கோடியில் 3 இடங்களில் சமுதாய நலக்கூடங்கள்: முதல்வா் திறந்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.7.46 கோடியில் கட்டப்பட்ட 3 சமுதாய நலக்கூட்டங்களை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை ம... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னையை தீா்க்கக் கோரிஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: மீனவா் பிரச்னைகளைத் தீா்க்க வலியுறுத்தி புதுவை மாநில அகில இந்திய சிங்காரவேலா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் செங்கொடி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடந்தது. புதுச்சேரி சிங்கார வேலா் சிலை அருக... மேலும் பார்க்க

உருளையன்பேட்டை தொகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட ராஜா நகா் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ராஜா நகா், மு... மேலும் பார்க்க