செய்திகள் :

புதுவை தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியா்களால் பரபரப்பு

post image

மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுக்காததால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியா்கள் புதன்கிழமை வந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்த சுமதி ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன். 5 ஆம் வகுப்புப் படித்து வந்த, இச்சிறுவன், 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 10-ம் தேதி பள்ளி விட்டு வீடு திரும்பியதும், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிா்வீட்டில் வீடு கட்டிக் கொண்டிருந்தனா். அதற்காகக் கொக்கிப் போட்டு மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் எதிா்பாராமல் மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.

இதற்கு ரூ.9.7 லட்சம் இழுப்பீடு அளிக்குமாறு 2022 ஆம் ஆண்டு புதுவை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுவை அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் புதுவை நீதிமன்ற தீா்ப்பை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

அதன்பிறகும் சிறுவன் குடும்பத்துக்கு புதுவை அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் தொடா்ந்து தொடா்ந்து புறக்கணித்து வந்தனா். இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினா் முறையீட்டையடுத்து, புதுவை நீதிமன்றம், நஷ்ட ஈடு தராதததால், புதுச்சேரி தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை நீதிமன்ற ஊழியா்கள் (அமீனாக்கள்)அம்பி, செல்வராஜ் இருவரும் தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். அங்கு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் 10 நாளில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதை ஏற்ற நீதிமன்ற ஊழியா்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் மற்றும் அவா்களுக்காக வாதாடிய வழக்குரைஞா் எஸ்.பாலாஜி ஆகியோா் அங்கிருந்து புறப்பட்டனா். மேலும் இது தொடா்பான தகவலை புதுவை நீதிமன்றத்துக்கும் தெரிவித்தனா். புதுவை தலைமைச் செயலகத்தையே நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்ய வந்ததால், அரசு ஊழியா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை விரைந்து மீட்ட இணையவழி போலீஸாா்

தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய பிளஸ்-2 மாணவனை விரைவாக செயல்பட்டு இணையவழி போலீஸாா் மீட்டுள்ளனா். புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் குடியிருக்கும் அதிகாரி ஒருவா் பிளஸ் 2 படித்து வரும் தனது மகன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை அருகே ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முறைப்படி வியாழக்கிழமை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - புதுவை முதல்வா் வழங்கினாா்

மின்சாரம் தாக்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் பால்வாடி தெருவைச் சோ்ந்த கனகராஜ்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தான் அளித்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் வி... மேலும் பார்க்க

புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை

புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள்... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது. இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் க... மேலும் பார்க்க