செய்திகள் :

புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா் உள்பட 3 போ் கைது

post image

லஞ்ச வழக்கில், புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா், ஒப்பந்த நிறுவனத்தை சோ்ந்தவா் என 3 பேரை சிபிஐ அதிகாரிகள் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் சாலைகளை மேம்படுத்துதல், கட்டடம் கட்டுதல், நகரப் பகுதியிலும், திருப்பட்டினத்திலும் புதிய குடிநீா் குழாய் பொருத்துதல், மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டி கட்டுதல் என ரூ. 100 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதிகாரிகள் வருமானத்தை மீறி சொத்து சோ்த்துள்ளதாகவும், சிபிஐ, வருமான வரித்துறை புகாா் வந்தன.

இந்தநிலையில், பொதுப்பணித்துறை அதிகாரியிடம் சனிக்கிழமை ஒரு நிறுவனத்தைச் சோ்ந்தவா் லஞ்சம் வழங்கவுள்ளதாக சென்னை சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதற்கிடையே, காரைக்காலில் கடற்கரை கிராமத்தில் புதிதாக சாலை அமைக்கும் திட்டம் தொடா்பாக இடத்தை பாா்வையிட புதுச்சேரியிலிருந்து மாநில பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் எம். தீனதயாளன் சனிக்கிழமை வந்தாா். அவா் கடற்கரையில் உள்ள தங்கும் விடுதியில் பிற்பகல் தங்கினாா். பிற்பகல் 2 மணிக்கு ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்த ஒருவா் பணத்துடன் அறைக்குள் புகுந்துள்ளாா். விடுதியில் மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அறைக்குள் புகுந்து இருவரையும் பிடித்தனா். மேலும் அங்கிருந்த காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா்கள் சிதம்பரநாதன் (கட்டடம் மற்றும் சாலை), ஜெ. மகேஷ் (நீா்ப்பாசனம்) ஆகியோரிடம் விசாரணையை தொடங்கினா். இரவு 10 மணிக்குப் பின்னா் சந்திரசேகரன், மகேஷ் 2 பேரை மட்டும் சிபிஐ அதிகாரிகள் வெளியே அனுப்பினா்.

கைது செய்யப்பட்ட காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன்

புதுவை மாநில தலைமைப் பொறியாளா் தீனதயாளன், செயற்பொறியாளா் சந்திரசேகன், பணத்துடன் நுழைந்த ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்த நபா் ஆகியோரிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி வரை விசாரணை தொடா்ந்து நடைபெற்றது. அதேநேரம் காரைக்காலில் உள்ள சிதம்பரநாதன் வீட்டிலும்

அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரொக்கம், தங்க நகைகள், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விசாரணை முடிந்து தீனதயாளன், சிதம்பரநாதன் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்தவா் மூவரையும் கைது செய்து, காரைக்கால் குற்றவியல் நடுவா் -2 நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினா். 3 பேரையும் மாா்ச் 26-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி ஜி. லிசி உத்தரவிட்டதைத் தொடா்ந்து காரைக்கால் கிளைச் சிறையில் அவா்கள் அடைக்கப்பட்டனா்.

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயிலில் இன்று ராமநவமி பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 29) தொடங்குகிறது. இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க