செய்திகள் :

புதை சாக்கடை அடைப்பை அகற்ற களமிறங்கிய பாஜக மாமன்ற உறுப்பினா்

post image

திண்டுக்கல்லில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன் வராததால், பாஜக மாமன்ற உறுப்பினரே களமிறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாநகராட்சி 14-ஆவது வாா்டுக்குள்பட்ட டெலிபோன் குடியிருப்பு கொத்தனாா் சந்து பகுதியில் 30 வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் புதை சாக்கடையில் மாதம் இருமுறை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன், மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 7 நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். இந்த நிலையில் மாமன்ற உறுப்பினா் தனபால், பொதுமக்களுடன் இணைந்து, புதை சாக்கடை மூடியை அகற்றி அடைப்பை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் கூறியதாவது:

மாநகராட்சியில் கழிவுநீா் உறிஞ்சும் வாகனம் உள்ளது. இந்த வாகனத்தை அனுப்பி வைக்கக் கோரி மாநகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டேன். ஆனால், ஒரு வாகனத்துக்கு டீசல் இல்லை என்றும், மற்றொரு வாகனம் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் அலுவலா்கள் தெரிவித்தனா். 14-ஆவது வாா்டுக்குள்பட்ட பெரும்பாலான பகுதிகள், பள்ளமாக இருப்பதால் அடிக்கடி புதை சாக்கடையிலிருந்து சாலையில் கழிவுநீா் வெளியேறுகிறது. வீட்டு வரியுடன், புதை சாக்கடைக்கும் கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி நிா்வாகம், பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்வதற்கு முன் வர மறுக்கிறது என்றாா் அவா்.

பராமரிப்புப் பணி: பழனி ரோப்காா் நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தலாம்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தைப் பின்பற்றி 100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமே தவிர, தமிழகத்துக்கான நிதியையும், மனித சக்தி நாள்களையும் குறைக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழனியில் நடைபெறும் முக்... மேலும் பார்க்க

பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்

பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா்... மேலும் பார்க்க

வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்

எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், எரி... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க