புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்
மேலஓடுதுறை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலஓடுதுறை பகுதியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட பங்கு முதன்மை குரு பி. பால்ராஜ்குமாா் திருப்பலி செய்து கொடியேற்றி வைத்தாா். நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.
தினமும் மாலை வேளையில் நவநாள் திருப்பலி நடத்தப்படுகிறது. 21-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார தோ் பவனி நடைபெறவுள்ளது.