செய்திகள் :

பும்ராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை..! வசனத்தை மாற்ற சிராஜிக்கு அர்ஷ்தீப் வேண்டுகோள்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய முகமது சிராஜிக்கு அர்ஷ்தீப் வழங்கிய பாராட்டு நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

இந்திய அணியில் பும்ரா முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பும்ரா குறித்து சிராஜ், “நான் ஜஸ்ஸி பாயை மட்டுமே நம்புகிறேன். ஏனெனில் அவர் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் அவர் மட்டுமே” என தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் பேசியது வைரலானது.

(ஐ ஒன்லி பிளிவ் ஆன் ஜஸ்ஸி பாய், பிகாஸ் ஹீ இஸ் கேம் சேஞ்சர் பிளேயர் ஹீ இஸ், ஒன்லி ஒன் காய் ஜஸ்பிரீத் பும்ரா - சிராஜ் பேசியது).

தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா இல்லாமல் சிராஜ் அசத்தியதால் அந்த வசனத்தை மாற்றும்படி சிராஜிடம் அர்ஷ்தீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வசனத்தை மாற்றுங்கள் சிராஜ் - அர்ஷ்தீப் புகழாரம்

டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் முடிவுக்குப் பிறகு சிராஜ் பிசிசிஐ நேர்காணலில் பேசிக்கொண்டிருந்தபோது அர்ஷ்தீப் அருகே வந்து, “திட்டங்கள் மாறிவிட்டன. நீங்கள் வசனத்தை மாற்றுங்கள் சிராஜ். ’இனிமேல் நான் என்னையும் பும்ராவையும் நம்புவேன்’ என மாற்றுங்கள்” என்றார்.

இது சிராஜிக்கு மிகப்பெரிய கௌரமாகக் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த விடியோவும் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலமாக ஃபாலோ-ஆனை தவிா்த்த அந்த அணி, தற்போது 180 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்தின் பேட்டர்களை ஆகாஷ் தீப், சிராஜ் கூட்டணி வீழ்த்தினார்கள்.

குறிப்பாக இந்தப் போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அர்ஷ்தீப் பேசிய அந்த விடியோவை பிசிசிஐ இணையதளத்தில் இருக்கும் இந்த இணைப்பில் காணலாம்.

The dialogue has been changed! Mohammed Siraj's famous one-liner is now, 'I Only Believe In Myself And Jassi Bhai', thanks to fellow pacer Arshdeep Singh.

கேப்டன் ஷுப்மன் கில் அபாரம்; இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில்... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போ... மேலும் பார்க்க

அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை: இங்கிலாந்துக்கு 364 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளைய... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 5) கொழும்புவில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4-வது ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில... மேலும் பார்க்க