செய்திகள் :

புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை: புதுவை முதல்வா் வழங்கினாா்

post image

புதுச்சேரியில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்திகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பிலான விவசாயப் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். நிவாரணத் தொகைக்கு நிதித் துறை ஒப்புதல் அளித்ததையடுத்து, 12,955 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.24.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஏற்கெனவே ஏனாம் பிராந்திய விவசாயிகள் 199 பேருக்கு ரூ.24.60 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், காரைக்கால் பிராந்தியத்தில் 5,020 விவசாயிகளுக்கு ரூ.11.64 கோடி வழங்கப்பட்டது. புதுச்சேரியில் 7,736 விவசாயிகளுக்கு ரூ.12.22 கோடி நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி நிவாரணத் தொகைக்கான காசோலையை விவசாயிகளிடம் வழங்கினாா்.

வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், காலாப்பட்டு எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

அந்தமான் - நிகோபாா் தீவுகள் குறித்த பல பரிமானக் கோணங்கள் எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மத்திய மானியக்குழு கடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!

புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.

நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க