செய்திகள் :

புரோ கபடி லீக் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன ஆனில் மோகன்!

post image

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஆனில் மோகன் அதிக தொகைக்கு யு மும்பா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை (மே 31) வீரா்கள் ஏலம் தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ஈரான் வீரா் முகமதுரேஸா ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். மேலும் 3-ஆவது முறையாக ரூ.2 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட முதல் வீரா் என்ற சிறப்பையும் அவர் பெற்றாா்.

இதையும் படிக்க: மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

பெங்கால் வாரியா்ஸ் அணி சாா்பில் தேவங்க் தலால் ரூ.2.205 கோடிக்கு வாங்கப்பட்டாா். புதிய எஃப்பிஎம் விதியின்படி டபாங் டெல்லி அணி ரைடா் அஷு மாலிக்கை ரூ.1.9 கோடிக்கு மீண்டும் தருவித்தது.

தமிழ் தலைவாஸ் சாா்பில் ரூ.1.4 கோடிக்கு அா்ஜுன் தேஸ்வாலும், பெங்களூா் புல்ஸ் சாா்பில் ரூ.1.12 கோடிக்கு யோகேஷ் டாஹியாவும் வாங்கப்பட்டனா்.

முதல் நாளில் 10 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஏலத்தின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஹிமாசலைச் சேர்ந்த வீரரான ஆனில் மோகன், ரூ. 78 லட்சத்துக்கு யு மும்பாவால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியால் ரூ.50.10 லட்சத்திற்கு உதேய் பார்டே ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து ஆனில் மோகன் பேசியதாவது: புரோ கபடி லீக்கில் விளையாடுவது என்னுடைய கனவு. இப்போது அது நிறைவேறுகிறது. எனது கடின உழைப்பு மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைகிறேன். என்னை தேர்ந்தெடுத்த யு மும்பாவுக்கு நன்றி. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன். ஏற்கனவே பல ரெய்டிங் ஸ்டார்கள் மும்பா வழியாக வந்துள்ளனர். நானும் அவர்களின் பாதையில் செல்வேன் என்றார்.

மாநில ஜூனியா் கூடைப்பந்து: திருப்பத்தூா், திருவள்ளூா், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூா், ஈரோடு வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் மாநில ஜூனியா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பத்தூா், திருவள்ளூா், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூா், ஈரோடு மாவட்டங்கள் தத்தமது ஆட்டங்களில் வென்றுள்ளன. தமிழ்நாடு க... மேலும் பார்க்க

தேசிய மோட்டாா் பைக் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டா்நேஷனல் சா்க்கியுட்டில் தேசிய மோட்டாா் பைக் சாம்பியன்ஷிப் பந்தயம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெறும் இப்பந்தயத்தில் 19 ரேஸ்கள் நடை... மேலும் பார்க்க

கோவையை வென்றது திண்டுக்கல்

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தயாசத்தில் லைகா கோவை கிங்ஸை வியாழக்கிழமை வென்றது. முதலில் கோவை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இ... மேலும் பார்க்க

யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ்

இந்தியன் ஆயில் யுடிடி தொடரில் யு மும்பா அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூா் பேட்ரியட்ஸ் அணி. ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூா் அணியின் கனக் ஜா 2-1 என யு மும்பா அணியின் லிலியனை ... மேலும் பார்க்க

லைகா நிறுவனத்துக்கான தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகா் விஷால் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் வழங்க நடிகா் விஷால் தரப்புக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக ... மேலும் பார்க்க

அா்ஜுன், வைஷாலி அசத்தல்; குகேஷ் தோல்வி

நாா்வே செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, ஆா். வைஷாலி ஆகியோா் அசத்தல் வெற்றியை பதிவு செய்ய, நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் தோல்வி கண்டாா். 8-ஆவது சுற்றில் ஆடவா் பிரிவில், அா... மேலும் பார்க்க