செய்திகள் :

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?

post image

சிங்கப்பூர் நாட்டில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்முகம்நாதன் ஷாம்லா (வயது 70), இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்திலுள்ள புறாக்களுக்கு வழக்கமாக உணவளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் வனவிலங்குச் சட்டத்தின்படி, வன உயிரினங்களுக்கு வனத்துறை தேசியப் பூங்காவின் உயர் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறாமல் உணவளிப்பது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் புறக்களுக்கு உணவளித்ததைக் கண்ட தேசியப் பூங்கா அதிகாரிகள், மீண்டும் அந்தச் செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், ஷாம்லா அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், 2024 நவம்பர் வரை அங்குள்ள புறாக்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார்.

இத்துடன், கடந்த பிப்ரவரியில் அவரது வீட்டின் அருகிலுள்ள புறாக்களைப் பிடிக்க தேசியப் பூங்கா அதிகாரிகள் வலைகளை விரித்தபோது, அதனை எதிர்த்து ஷாமலா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்கள் தங்களது பணிகளைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், புறாக்களுக்கு உணவளித்ததற்காக அவர் மீது அந்நாட்டின் வனவிலங்குச் சட்டத்தின் படி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு 8 வழக்குகள் அவர் மீது பதிவுச் செய்யப்பட்டன. பின்னர், அப்போது அவர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டிருந்தார். அத்துடன் சேர்த்து, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 11 வழக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்தத் தொடர் குற்றத்துக்காக ஷாம்லாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1,200 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய பண மதிப்பீட்டில் ரூ. 79,373) அபராதமாக விதித்துள்ளது.

மேலும், அவர் அபராதம் செலுத்தவில்லை என்றால் இரண்டு நாள்கள் சிறையில் கழிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்த நிலையில் இன்று (மே 28) அவர் அபராதம் செலுத்தி இந்த வழக்கிலிருந்து விடுதலையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!

பிரேஸில் குழந்தை பொம்மைக்கு குதூகலக வரவேற்பு

பிரேஸிலில் உயிருடன் இருக்கும் குழந்தையைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ‘ரீபாா்ன்’ பொம்மைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் அது வைரலாகப் பரவிவரும் நிலையில், ரியோ டி ஜெனீரோ மாநகராட்ச... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கல் குவாரி இடிந்து 10 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா்; 6 தொழிலாளா்கள் மாயமாகினா். விபத்து ஏற்பட்டபோது குவாரி இடிபாடுகளுக்குள் 24 பேருக்கும் மேற்பட்டவா்கள் சிக்கிக் க... மேலும் பார்க்க

லிபியா: விபத்தில் 11 அகதிகள், ஓட்டுநா் உயிரிழப்பு

சூடான் உள்நாட்டுப் போருக்கு அஞ்சி, லிபியாவில் தஞ்சமடைந்த அகதிகளை ஏற்றி வந்த காருடன் எதிரே வந்த லாரி வெள்ளிக்கிழமை மோதியதில் 11 அகதிகளும் காரை ஓட்டிவந்த லிபியா நாட்டவரும் உயிரிழந்தனா். குஃப்ரா நகருக்கு... மேலும் பார்க்க

ஹாலிவுட் நடிகை குளித்த நீரில் தயாரித்த சோப் ரூ.700-க்கு விற்பனை!

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சோப்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து புதிய சோப் வகையை உருவாக... மேலும் பார்க்க

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!

நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான ... மேலும் பார்க்க

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெ... மேலும் பார்க்க