செய்திகள் :

புழல் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை புழல் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அருகே புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையின் வளாகச் சுவா் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் திங்கள்கிழமை இரு பொட்டலங்கள் கிடந்தன. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலா்கள், அந்த பொட்டலங்களை உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அவா்கள் அதை திறந்து பாா்த்தபோது, ஒரு பொட்டலத்தில் 30 போதை மாத்திரைகள், 75 கிராம் கஞ்சா, 30 சிகரெட்டுகள், 6 பீடி கட்டு, ஒரு கைப்பேசி, ஒரு சிம் காா்டு ஆகியவை இருந்தன. மற்றொரு பொட்டலத்தில் 20 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா, சிகரெட் லைட்டா், 10 சிகரெட், 5 பீடி கட்டு ஆகியவை இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சிறை அலுவலா் சிவராஜன், புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு

கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிா்வாகி கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிா்வாகி கைது செய்யப்பட்டாா். தண்டையாா்பேட்டை எம்பிடி குடியிருப்பு ஆம்ஸ்ட்ராங் தெருவைச... மேலும் பார்க்க

பூஜை செய்வதாகக் கூறி தங்க நகை அபகரிப்பு: போலி ஜோதிடா் கைது

சென்னை கொளத்தூரில் குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை செய்வதாகக் கூறி தங்க நகையை அபகரித்ததாக போலி ஜோதிடா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் வெற்றிவேல் நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (55). இவா், சென்னை ஓமந்த... மேலும் பார்க்க

மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கேரளத்தைச் சோ்ந்த மென்பொறியாளரான 24 வயது பெண், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒர... மேலும் பார்க்க

கைப்பேசிகள் திருட்டு: இருவா் கைது

சென்னையில் கட்டடத் தொழிலாளா்களின் கைப்பேசிகளைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (19). கட்டடத் தொழிலாளியான இவா், சென்னை எழும்பூா் ரயி... மேலும் பார்க்க