செய்திகள் :

பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் திறப்பு

post image

திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்தில் பூசாரிநாயக்கன் குளம் உள்ளது. இதன் மூலம் ஆலாம்பாளையம், குருவப்பநாயக்கனூா், குறிச்சிக்கோட்டை, குளத்துப்புதூா், குரல்குட்டை, மானுப்பட்டி, மடத்தூா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 90 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில், திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிட்டது. ஆனால், பிஏபி அதிகாரிகள் தண்ணீா் திறந்துவிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதைக் கண்டித்து உடுமலையில் உள்ள பிஏபி பொறியாளா் அலுவலகம் முன் விவசாயிகள் அண்மையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அரசாணையை செயல்படுத்தக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனா்.

இந்நிலையில், பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

மூன்று நாள்களுக்கு 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுகளாக தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது.

பல்லடத்தில் ஜூலை 27-இல் சிவ பக்தா்கள் மாநாடு: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

பல்லடத்தில் சிவ பக்தா்கள் மாநாடு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் ஜூலை 2-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின்வா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையராக எம்.பி.அமித் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எம்.பி.அமித் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி கடந்த மாதம் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, சென்னைப... மேலும் பார்க்க

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கொலை வழக்கில் அக்னிராஜின் ஆதரவாளா்கள் திருப்பூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் தங்கமணி... மேலும் பார்க்க

‘தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும்’

தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும் என்று திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ கூறினாா். திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியோா் நாள் விழா வெள்ளி... மேலும் பார்க்க