செய்திகள் :

``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்பது என்ன?

post image

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான திட்டங்களை இப்போதிலிருந்தே செயல்படுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் FOX NEWS சேனலுக்கு அளித்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ”சில நூறு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் பூமியின் வளிமண்டலத்தை அகற்றி, பெருங்கடல்களை கொதிக்க வைக்கும். அதுவே வாழ்க்கையின் முடிவாக இருக்கும்.

சுமார் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் பூமியை மூழ்கடித்து எரிக்கும் போது, ​​பேரழிவு வரும்”.. எனவே "மற்ற கிரகங்களில் குடியேறுவது குறித்து வலியுறுத்தினார்.

Elon musk

செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சி முடிவுகள், எதிர் காலத்தில் வரும் மாற்றங்கள், இவற்றை எல்லாம் பொறுத்து செவ்வாயில் மனதனின் வாழ்க்கை ஆதிக்கம் இருக்க வேண்டும் என்றும்,செவ்வாய் கிரகத்திற்கு தற்காலிக மனித வருகை மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு நிரந்தர, சுதந்திரமான அடித்தளத்தை உருவாக்குவது என மஸ்க் பேசியிருந்தார்.

தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, 53 வயதான மஸ்க், செவ்வாய் கிரக காலனித்துவத்தை நோக்கிய ஸ்பேஸ்எக்ஸின் முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளார்.

ஆனால் ”தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில்” வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், சூரியனால் பூமி அழிய பல பில்லியன் ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

எலான் மாஸ்க்

அதே சமயம் செவ்வாய் கிரகத்தில் மனித காலனி ஆதிக்கத்தை செயல்படுத்த நினைக்கும் எலான் மஸ்க் மற்றும் அவரது ஸ்ப்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2028 டிசம்பர் அல்லது 2029 ஜனவரியில், ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் என கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் குடியேறுபவர்கள் தங்களுக்கான ஆட்சி முறையை, தாங்களே தேர்ந்தெடுக்கலாம் என எலான் மஸ்க் கடந்த 2024-ல் ட்விட்டரில் ஒரு பயனருக்கு பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.அவரது ... மேலும் பார்க்க

`இந்தியாவுக்கு எதிரானப் போரில் எத்தனை பேர் பங்கெடுப்பீர்கள்?' - மதகுருவின் கேள்விக்கு மக்களின் பதில்

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவ... மேலும் பார்க்க

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின... மேலும் பார்க்க

`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்

ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. அந்த வீட்டில் அமெர... மேலும் பார்க்க

Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பாராட்டிய ஐஸ்வர்யா ராய்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களில் அதிக முறை, 500 ரன்களுக்கு ... மேலும் பார்க்க

``அனுமதி வாங்கி தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்'' - டிஸ்மிஸ் ஆன CRPF வீரர் சொல்வதென்ன?

ஜம்முவை சேர்ந்த முனீர் அகமத் என்பவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2017-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மினால் கான் என்ற பென்னை 2022-ல் திருமணம் செய்தார். இந்நிலையில்... மேலும் பார்க்க