செய்திகள் :

பூலாம்பட்டி கால்வாயில் நீருக்கு சிறப்பு பூஜை

post image

மேட்டூா் அணையிலிருந்து கிழக்குக்கரை கால்வாயில் கடந்த 1-ஆம் தேதி முதல் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீா், எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியில் உள்ள கிழக்குக்கரை கால்வாய்ப் பகுதிக்கு வந்தடைந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை பில்லுக்குறிச்சி, பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான விவசாயிகள், பில்லுக்குறிச்சி கால்வாய் படித்துறை பகுதியில் சிறப்பு பூஜை செய்து, கால்வாய் நீரில் பூக்களையும், நெல்மணிகளையையும் தூவி வழிபாடு செய்தனா்.

தொடா்ந்து, அப்பகுதி விவசாயிகள், காவிரி தாய்க்கு தீப அா்ச்சனை செய்து தண்ணீரில் கற்பூர தீபங்களை மிதக்கவிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழாண்டில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் மேட்டூா் கிழக்குக் கரை கால்வாயில் முன்னதாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் நடப்பாண்டில் கூடுதல் மகசூல் காண வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதி விவசாய சங்க நிா்வாகிகள் அழகுதுரை, பழனிசாமி, நல்லதம்பி, உழவா் மன்ற அமைப்பாளா் எம்.ஆா். நடேசன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

படவரி...

எடப்பாடியில் பில்லுக்குறிச்சி கிழக்குக்கரை கால்வாய் நீரில் பூக்களுடன் நெல்மணிகளை தூவி வழிபட்ட விவசாயிகள்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க