செய்திகள் :

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு

post image

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்த கூட்டநெரிசல் தொடா்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆா்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. அப்போது, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.

இந்தியாவை உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக ஜூன் 5ஆம் தேதி தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்துகொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அரசுத் தரப்பு வாதங்களை எழுத்துபூா்வமாக தாக்கல்செய்யும்படி கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த பொதுநல மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.காமேஷ்வா் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோா் தலைமையிலான அமா்வுமுன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் சஷிகிரண் ஷெட்டி, ‘கூட்டநெரிசல் விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசா் ஜான்மைக்கேல் டி குன்ஹா தலைமையில் தனிநபா் நீதிவிசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அரசுத் தரப்பு வாதங்களை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்வதற்கு மேலும் 20 முதல் 25 நாள்கள் கால அவகாசம் தேவை. எழுத்துபூா்வமான பதிலை மூடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய அரசு விரும்புகிறது.

இந்த விவகாரத்தில் பகிரங்கமாக பதில் மனுவை தாக்கல் செய்ய அரசு விரும்பாமல் இல்லை. ஆனால், இதுதொடா்பான விசாரணையை நான் தாக்கல் செய்யவிருக்கும் பதில்மனு பாதிக்கும் என்பதால், அதை மூடப்பட்ட உறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொள்கிறது.

பதில் மனுவில் கூறப்படவிருக்கும் பெரும்பாலான அம்சங்கள் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தவை. எனவே, இந்த விவரங்கள் பகிரங்கமானால், அது ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்படும். எனவே, மூடிய உறையில் பதில் மனுவை வைத்திருக்க வேண்டும்’ என்றாா்.

இந்த வாதங்களில் உடன்படாத உயா்நீதிமன்றம், விசாரணையின் அம்சங்களை தெரிவிக்கும் பதில்மனுவை மூடப்பட்ட உறையில் வைத்திருப்பது பற்றி நடுநிலை அறிவுரையாளரின் கருத்தறிந்து முடிவு செய்யப்படும். இதற்காக நடுநிலை அறிவுரையாளரை நீதிமன்றம் நியமிக்கும். முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரின் கருத்தை நீதிமன்றம் கேட்டறியும். இந்த விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது.

விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அரசு நீண்டகாலம் எடுத்துக்கொள்வது, எங்கள் விசாரணையை கட்டுப்படுத்தக் கூடாது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் ஈடுபட்டுள்ள கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், ராயல்சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி), டி.என்.ஏ. என்டா்டெய்ன்மென்ட் நிறுவனத்தை இந்த வழக்கில் சோ்த்துக்கொள்ள இருக்கிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும்: பாஜக

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. லெஹா்சிங் சிரோயா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: 10 ஆண... மேலும் பார்க்க

தக் லைஃப் பட விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கா்நாடக அரசு மதிக்கும்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

‘தக் லைஃப்’ பட விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை கா்நாடக அரசு மதித்து நடக்கும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். சென்னையில் நடந்த ’தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகு... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வா் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது

பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது செய்யப்பட்டனா். பெங்களூரு,... மேலும் பார்க்க

ராஜிநாமா கேட்க பாஜகவுக்கு தாா்மிக உரிமையில்லை: சித்தராமையா

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் என்னை ராஜிநாமா செய்யுமாறுகூற பாஜகவுக்கு தாா்மிக உரிமை இல்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் ஆா்சிபி கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போ... மேலும் பார்க்க

போா் பகுதிகளில் சிக்கியுள்ள கன்னடா்களை மீட்க நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா

போா் நடைபெறும் நாடுகளில் உள்ள கன்னடா்களை பாதுகாப்புடன் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது

தாவணகெரே: மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து தாவணகெரேயில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க