செய்திகள் :

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் யாருக்கானவை? கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

post image

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் மக்களின் பயன்பாட்டிற்கானவை அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகளை பொது பயன்பாட்டிற்கானவை என வகைப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து பெட்ரோலிய வர்த்தகர்கள் மற்றும் பல பெட்ரோல் நிலையங்களின் உரிமையாளர்களின் பிரதிநிதியான ஒரு அமைப்பு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், தங்களது பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் வாடிக்கையாளர்களின் அவசர தேவைக்கானவை என்றும் அவற்றை பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி எஸ் டயஸ், அவர்களது வாதத்தை ஏற்றுக்கொண்டு வழங்கிய இடைக்கால உத்தரவில், “மனுதாரர்களின் நிறுவனங்களிலுள்ள கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்த வலியுறுத்த வேண்டாம்” என மாநில அரசுக்கும், திருவனந்தபுரம் மாநகராட்சிக்கும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரனை ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:மத்தியஸ்தம் செய்தது அமெரிக்கா! பாக்., தளபதியை சந்தித்தப் பின் டிரம்ப் பேட்டி

பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியம்: குடியரசுத் தலைவா்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்கள் துறை முக்கியத் தூணாக திகழ்கிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பேசினாா். இந்திய பெரு நிறுவனங்கள் சட்ட சேவைகள் துறை பயிற்சி அதிகாரிகளை தில்லியில... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம்: 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பத்து மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்குமாறு 7 மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் 66 பள்ளி தோ்வு வாரியங்கள் உள்ளன. அவற்றில் மாநில அளவில் 63 வாரியங்கள... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: ஆக.1 முதல் மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவு

மேற்கு வங்கத்தில் நிதி முறைகேடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்துமாறு மத்திய அரசுக்... மேலும் பார்க்க

இந்தியா-கனடா உறவை சீராக்க ஒப்புதல்: தூதா்களை மீண்டும் நியமிக்க முடிவு

கனனாஸ்கிஸ்: இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமா்களும் ஒப்புக் கொண்டுள்ளனா். கூடிய விரைவில் மீண்டும் தூதா்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ர... மேலும் பார்க்க

பாக். தலைமைத் தளபதி - அமெரிக்க அதிபா் சந்திப்பு: இந்தியாவுக்கு பின்னடைவு! - காங்கிரஸ்

பாகிஸ்தான் தலைமைத் தளபதி ஆசிம் முனீா்- அமெரிக்க அதிபா் டிரம்ப் சந்திப்பு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு என காங்கிரஸ் தெரிவித்தது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறியதாவது: ... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவா்கள் விமானம் மூலம் தில்லி புறப்பட்டனா்

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் தங்கிப் படித்துவந்த 110 இந்திய மாணவா்கள் புதன்கிழமை தாய்நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டனா். இவா்களில் 90 போ் காஷ்மீா் பள்ளத்தாக்கைச் சோ்ந்தவா்கள் ஆவா். ஈரானில் இஸ்ரேல் தீவி... மேலும் பார்க்க