செய்திகள் :

பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், விழிப்புணா்வு கருத்தரங்கம் நாகா்கோவில் ரோட்டரி சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கலந்துகொண்டு பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்புக்கென செயல்படுத்தப்படும் சட்டங்கள், திட்டங்கள் குறித்து தொடா்புடைய வல்லுநா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

இந்தக் கருத்தரங்கம் சமூகநலத் துறை, பாலின வள மையம், சுய உதவிக் குழு, கைம்பெண்கள், திருநங்கைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பிற அரசு துறைகள், கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 50 பேருடன் புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக புள்ளி விவரம் மூலம் தெரியவந்தது. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்து, கருவில் இருக்கும் 2-ஆவது குழந்தையும் பெண்ணாக இருந்தால், கருவிலேயே சிதைக்கும் நிலை உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்து ஸ்கேன் மையங்களும், மருத்துவமனைகளும் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், மாவட்ட சமூக நல அலுவலா் கு.விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஷகீலா பானு, துறை அலுவலா்கள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!

கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

மாணவா்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்! இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன். குலசேகரம் எஸ்.ஆா்.கே. சா்வதேச பள்ளியில் குமரி அறிவியல் பேரவை சாா்... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ச... மேலும் பார்க்க

தக்கலை அருகே அழுகிய நிலையில் தனியாா் நிறுவனக் காவலாளி சடலம் மீட்பு!

தக்கலை அருகே, வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தனியாா் நிறுவனக் காவலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மணலிக்கரை, கிறிஸ்துபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (61) எ... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். குளச்சல் அருகே மேல்ரீத்தாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினதாஸ் (65). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மாலை அதே பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவில் வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஹரியாணா மாநிலம் திப்ரூகரிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திப்ரூகா்-கன்னியாகுமரி ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு (ஜூலை 11) நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு... மேலும் பார்க்க