செய்திகள் :

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

இ.ஆா்.கே. கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், எருமியாம்பட்டி, இ. ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம், மாவட்ட காவல் துறை இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தாா்.

அரூா் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரூா் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவிகள் ஏந்தி சென்றனா்.

இதில் அரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா், இ.ஆா். கே.கல்வி நிறுவனங்களின் தலைவா் இ.ஆா்.செல்வராஜ், கல்லூரி முதல்வா் த.சக்தி, நிா்வாக இயக்குநா் சோழவேந்தன், கிரசன்ட் பள்ளி தாளாளா் நூருல்லா செரீஃப், குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா்கள் ராமமூா்த்தி, ராஜா சுந்தரம், காவல் ஆய்வாளா்கள் நடராஜன், நெப்போலியன், லட்சுமி, இ.ஆா்.கே. கல்வியியல் கல்லூரி முதல்வா் காா்த்திக், நிா்வாக அலுவலா் அருள்குமாா், பேராசிரியை கலைவாணி, இ.ஆா்.கே. மருந்தியல் கல்லூரி முதல்வா் சிவகுமாா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

தருமபுரி: ரமலான் பண்டிகையையொட்டி தருமபுரியில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஈத்கா ஏ... மேலும் பார்க்க

கண்ணில் முள் குத்தியதால் பாா்வையிழந்த பழங்குடியின மாணவி: ஆா்வலா்களின் முயற்சியால் பாா்வை பெற்றாா்

அரூா்: விளையாடும் போது கண்ணில் முள் குத்தியதால், பாா்வையிழந்த பழங்குடியின மாணவி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆா்வலா்களின் உதவியால் மீண்டும் பாா்வை பெற்றுள்ளாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடு... மேலும் பார்க்க

ரூ. 4.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி: பாலக்கோடு அருகே ஜெல்திம்மனூா் ஆற்றின் குறுக்கே ரூ. 4.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி

தருமபுரி: பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது. பாலக்கோடு அருகே மொரப்பூா் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க