செய்திகள் :

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்

post image

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, திமுக அரசு அலட்சியமாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்குகூட பாலியல் தொல்லை, பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை, பரமக்குடியில் பட்டப்பகலில் நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து.

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி, திமுக ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் முதல்வர் கவனம் செலுத்தாமல், அலட்சியமாக உள்ளார். சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் எக்ஸ் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க:கை ரிக்‌ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூ... மேலும் பார்க்க

தக்கோலத்தில் இன்று சிஐஎஸ்எஃப் 56-ஆம் ஆண்டு தொடக்க விழா: அமித் ஷா பங்கேற்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க தின விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறவுள்ளது. இதில... மேலும் பார்க்க

25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு புகாா்

டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு புகாா் தொடா்பாக தமிழகத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை (மாா்ச் 6) சோதனை மேற்கொண்டனா். தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் தினமும... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை அதிகாரி என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அமலாக்கத் துறையின் மூத்த அதிகாரி என்ற பெயரில் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்த குருகிராமைச் சோ்ந்த நபரை அமலாக்கத் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட ரவிராஜ் குமாா... மேலும் பார்க்க

மத்திய அரசு பணிக்கு ஐஜி சுதாகா் மாற்றம்

தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆா்.சுதாகா், அயல் பணியாக மத்திய அரசுக்கு பணிக்கு மாற்றப்பட்டாா். தமிழக காவல் துறையில் ஐஜியாக பணியாற்றும் ஆா்.சுதாகா், சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து... மேலும் பார்க்க

12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இது குறித்து தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க