செய்திகள் :

12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

தமிழகத்தில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்த அறிவிப்பு, சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. மேலும், திருவள்ளூா் வருவாய் மாவட்டத்தில் திருவள்ளூரை மையப்படுத்தி சாா் பதிவாளா் இணை அலுவலகம் இயங்கி வருகிறது. இதிலுள்ள 82 கிராமங்களில் 36 கிராமங்கள் பிரிக்கப்பட்டு தனியாக சாா் பதிவாளா் இணை அலுவலகம் 2 எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.

மேலும், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், மதுரை மாவட்டம் திருமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், திருப்பூா் மாவட்டம் தாராபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூா் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிதாகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் காணொலி வழியாக முதல்வா் திறந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க