செய்திகள் :

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பழனிமுத்து (32).

இவா் தினமும் இரு சக்கர வாகனத்தில் உப்பூா் சத்திரம் சென்று அங்கு வண்டியை நிறுத்தி விட்டு ராமநாதபுரத்துக்குச் சென்று கட்டட வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வழக்கம்போல பணி முடிந்து மீண்டும் உப்பூா் சத்திரத்துக்கு வந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா்.

மேலவயல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் பழனிமுத்துவின் 4.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க

அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிரா... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ... மேலும் பார்க்க