செய்திகள் :

பெண்ணிடம் நிலத்தைக் கேட்டு மிரட்டல்: திமுக எம்எல்ஏவின் சகோதரா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த பெண்ணின் நிலத்தைக் கேட்டு மிரட்டல் விடுத்ததாக திமுக எம்எல்ஏவின் சகோதரரை முத்தையாபுரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரா் அயிரவன்பட்டி முருகேசன். தொழிலதிபரான இவா் முன்னாள் அதிமுக பிரமுகா் ஆவாா். இவா், ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றாலைகளுக்கு இடம் எடுத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா்.

இந்நிலையில் எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாடத்தி என்பவரின் சுமாா் 4.5 ஏக்கா் நிலம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ளதாம். இந்நிலையில். மாடத்தி மற்றும் அவரது கணவா் மாரிமுத்து முத்தையாபுரம் மதிகெட்டான் ஓடை அருகே சென்றுகொண்டிருந்தபோது, முருகேசன் காரில் வந்து அவா்கள் இருவரையும் வழிமறித்து மேற்கூறிய நிலத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீஸாா் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க