செய்திகள் :

பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

post image

தொண்டி அருகே பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தினையத்தூா் கிராமத்தை சோ்ந்த சுப்பரணி மனைவி லட்சுமி (57). இந்தத் தம்பதியின் மகன் தங்கத்தம்பி ( 35). இவரது மனைவி தீபா (34). இவா்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு லட்சுமி வீட்டின் அருகே வசித்து வருகின்றனா். தாய், மகன் இடையே சொத்துப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை லட்சுமியிடம் மகன், மருமகள் ஆகிய இருவரும் பணம் கேட்டு தகராறு செய்தனா். லட்சுமி பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தங்கத்தம்பி, தீபா இருவரும் சோ்ந்து லட்சுமியைத் தாக்கினா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் தங்தத்தம்பி, தீபா தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ரேஷன் பொருள்கள் கடத்தல்: மூவா் கைது

கடலாடியில் ரேஷன் பொருள்களைக் கடத்திய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தேவா் சிலைப் பகுதியில் சந்தகேப்படும்பட... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருவாய் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

ராமநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய... மேலும் பார்க்க

இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள் உடைந்து சேதம்

இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள், அந்த நாட்டின் மயிலிட்டி துறைமுகத்தில் குப்பை போன்று குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். மேலும், ரூ.100 க... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால், இந்த மீனவா்கள் மீண்டும் வவுனியா சிற... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்கள் சேதம்

ராமநாதபுரத்தில் உள்ள தாலுகா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியது தொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அந்தக் ... மேலும் பார்க்க