செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

post image

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால், இந்த மீனவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 356 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடந்த 9-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

இதையடுத்து, ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த இருதய டிக்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படைகைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த டல்லஸ் (56), பாஸ்கரன் (45), ஆரோக்கிய சான்டிரின் (20), சிலைடன் (26), ஜேசு ராஜா (33), அருள்ராபா்ட் (53), லொய்லன் (45) ஆகிய 7 மீனவா்களைக் கைது செய்து, படகுடன் மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் மன்னாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 7 பேரையும் விடுதலை செய்தாா். மேலும், 6 மீனவா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதமும், ஒரு மீனவா் இருதய மருத்துவ சிகிச்சை பெற உள்ளதால் அவருக்கு ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருவாய் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

ராமநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய... மேலும் பார்க்க

இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள் உடைந்து சேதம்

இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள், அந்த நாட்டின் மயிலிட்டி துறைமுகத்தில் குப்பை போன்று குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். மேலும், ரூ.100 க... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்கள் சேதம்

ராமநாதபுரத்தில் உள்ள தாலுகா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியது தொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அந்தக் ... மேலும் பார்க்க

விடுவிக்கப்பட்ட 7 படகுகளை மீட்டுவர இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 7 விசைப் படகுகளை மீட்பதற்காக ராமேசுவரத்திலிருந்து 14 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகளை ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க