காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்கள் சேதம்
ராமநாதபுரத்தில் உள்ள தாலுகா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியது தொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அந்தக் கட்சியிலிருந்து விலகியவா்கள் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவா் கே.வீ.தங்கபாலு, இணைச் செயலா் நிதின்கும்பல்கா், ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பு, பொதுச் செயலா் செல்வம் ஆகியோா் ராமநாதபுரத்துக்கு கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி வந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த இடம் முழுமையாக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது என்பதை ஆவணங்கள் மூலம் உறுதி செய்து, அதே இடத்தில் அலுவலகம் திறக்கப்பட்டு, அதற்கு தேவையான பொருள்களும் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலையில் மா்ம நபா்கள், இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தி கொடிக் கம்பத்தையும் உடைத்துள்ளனா்.
இது குறித்து மாவட்டப் பொருளாளா் ராஜாராம் பாண்டியன், நகா் தலைவா் கோபி உள்ளிட்டோா் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.