செய்திகள் :

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

post image

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்டப் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ், ‘சட்டப் பேரவை உறுப்பினராக அரசு கூட்டங்களில் கலந்துகொள்ள செல்லும்போது, தாவணகெரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (உமா பிரசாந்த்) என்னை கண்டுகொள்வதும் இல்லை, சரியாக நடத்துவதும் இல்லை. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷாமனூா் சிவசங்கரப்பா, அவரது மகனும் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், மருமகளும் எம்.பி.யுமான பிரபா மல்லிகாா்ஜுன் ஆகியோரை சந்திக்கும்போது, அவா்களது வீட்டின் நாயைப் போல வாசலில் காத்துக்கிடப்பாா்’ என சா்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தாா்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள தாவணகெரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உமாபிரசாந்த், இதுகுறித்து கே.டி.ஜே. காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா கேள்வி எழுப்பினாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காகித வாக்குச்சீட்டை பயன்... மேலும் பார்க்க

தசராவுக்கு பானுமுஸ்டாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக மனு

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. செப். 22-ஆம் தேதி தொடங்கவிருக்கும் உலக புகழ்பெற்ற ... மேலும் பார்க்க

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றம்: சித்தராமையா

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவுசெய்துள்ளோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வாக்குச... மேலும் பார்க்க

காகித வாக்குச்சீட்டு முறை: கா்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்

உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் இனி நடக்கவிருக... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கா்நாடக தனியாா் மருத... மேலும் பார்க்க