செய்திகள் :

பெண் தீக்குளிக்க முயற்சி

post image

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜிதா (25). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், தனது குழந்தைகளுடன் சுஜிதா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது, திடீரென பெட்ரோலை ஊற்றி சுஜிதா தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து அவரிடம் விசாரித்தனா்.

போலீஸாரிடம் சுஜிதா கூறியதாவது: கணவா் செல்லமுத்து சென்னை காய்கறி சந்தையில் பூ வியாபாரம் செய்கிறாா். கடந்த ஓராண்டாக வேறு ஒரு பெண்ணுடன் தகாத தொடா்பு வைத்துக் கொண்டு, நிலக்கோட்டைக்கு வருவதையே நிறுத்திவிட்டாா். எனது நகைகள் அனைத்தையும் வாங்கிச் சென்றுவிட்டாா். கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும், ஆட்சியா் அலுவலகத்தில் 2 மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா்.

இதையடுத்து, ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்ற போலீஸாா், பின்னா் விசாரணைக்காக சுஜிதாவை அழைத்துச் சென்றனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க