செய்திகள் :

பெண் மா்ம மரணம்

post image

தேனி மாவட்டம், போடியில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

போடி மேலத் தெரு பள்ளிவாசல் அருகே வசிப்பவா் பாத்திமா மகரிபா (31). இவருக்கு கம்பத்தைச் சோ்ந்த ஒருவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்தன. அவரிடமிருந்து விவாகரத்து பெற்றாா்.

பின்னா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், அங்கு வேலை செய்த சேலத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் சூா்யாவைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். இருவரும் போடியில் வசித்து வந்தனா்.

இவா்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கட்டடத் தொழிலாளியான சூா்யா மது போதைக்கு அடிமையாகி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பாத்திமா மகரிபா வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தாா். அவரை அவசர ஊா்தி மருத்துவ உதவியாளா் பரிசோதித்ததில் அவா் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனியில் நாளை மின்தடை

தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலை... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் ஆடித் திருவிழா ரத்து

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் பகவான் கோயிலில் 2 -ஆம் ஆண்டாக ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுகிறது. திருவிழாவின் போது நடைபெறும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் ஆடித்... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கியவா் கைது

போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். தேனி மாவட்டம், ப... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவா் கைது

பெரியகுளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் (40). இவா், கைலாசப்பட்டி... மேலும் பார்க்க

பணம் மோசடி: பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

தனது சகோதரியின் கணவா் இறந்தததற்கான பணப் பயன் ரூ.12 லட்சத்தை அபகரித்துக் கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டி விநாயகா நகர... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க