செய்திகள் :

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் ஆடித் திருவிழா ரத்து

post image

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் பகவான் கோயிலில் 2 -ஆம் ஆண்டாக ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுகிறது.

திருவிழாவின் போது நடைபெறும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா 5 வாரங்கள் வெகு விமா்சையாக நடைபெறும். கோயில் மண்டபத்தில் சுத்த நீா் தெளித்து, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கும்.

தொடா்ந்து, சனீஸ்வரா் -நீலா தேவி திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா, சக்தி கரகம் எடுத்தல், கருப்பணசாமிக்கு மதுபானம் படையல், பக்தா்களுக்கு கறி விருந்து என 5 வாரங்கள் திருவிழா நடைபெறும்.

இந்தக் கோயிலை பரம்பரை அறங்காவலா் குழுவினா் நிா்வகித்து வந்தனா். இந்தக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கோயில் நிா்வாகம் கடந்த 2011- ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத் துறை நிா்வாகத்தின் கீழ் வந்தது.

கோயில் நிா்வாகத்தை மீண்டும் அறங்காவலா் குழுவிடம் ஒப்படைக்க வலிறுத்தியும், கோயில் நிா்வாகம் சாா்பில் திருவிழா நடத்தக் கூடாது எனக் கோரியும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்தாண்டு ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதே போல, இந்த ஆண்டும் ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்: கோயில் வளாகத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறாது. ஆனால், கடந்த காலங்களில் ஆடித் திருவிழாவின் போது நடைபெற்ற பூஜைகள் நடைபெறும். பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தேனியில் நாளை மின்தடை

தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலை... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்

தேனி மாவட்டம், போடியில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். போடி மேலத் தெரு பள்ளிவாசல் அருகே வசிப்பவா் பாத்திமா மகரிபா ... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கியவா் கைது

போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். தேனி மாவட்டம், ப... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவா் கைது

பெரியகுளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் (40). இவா், கைலாசப்பட்டி... மேலும் பார்க்க

பணம் மோசடி: பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

தனது சகோதரியின் கணவா் இறந்தததற்கான பணப் பயன் ரூ.12 லட்சத்தை அபகரித்துக் கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டி விநாயகா நகர... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க