Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?
பென்னிங்டன் வளாகத்தை இடிக்கும் தீா்மானம் ரத்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் வணிக வளாகம் தொடா்பாக நிா்வாகக் குழுவுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் இடையேயான பிரச்னையில், இந்தக் கட்டடத்தை இடிக்கும் தீா்மானத்தை நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நேதாஜி சாலையில் பேருந்து நிலையம் அருகேயுள்ள பென்னிங்டன் நிா்வாகக் குழுவுக்குச் சொந்தமான 90 ஆண்டுகள் பழைமையான வணிக வளாகம் உள்ளது. இங்கு 150 கடைகள் உள்ளன.
இந்த நிலையில், பென்னிங்டன் நிா்வாகக் குழுவின் பதவி வழித் தலைவரான மாவட்ட ஆட்சியா், வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் வாடகையை உயா்த்தவும், நீண்ட காலமாக வாடகை செலுத்தாதக் கடைகளை காலி செய்யவும் உத்தரவிட்டாா்.
இதில் ஏற்பட்ட பிரச்னையில் குழு நிா்வாகிகள் பதவியிலிருந்து விலகியதால், புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றனா். மாவட்ட நிா்வாகத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிா்வாகிகள், பென்னிங்டன் நிா்வாகத்தில் மாவட்ட ஆட்சியா் தலையிடத் தடையாணை பெற்றனா்.
90 ஆண்டுகள் பழைமையான பென்னிங்டன் வணிக வளாகக் கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்ததால், ஒரு மாதத்துக்குள் வணிக வளாகத்தை இடித்து அகற்ற சிவகாசி சாா் ஆட்சியா் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டாா். இதை எதிா்த்தும் நிா்வாகிகள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனா்.
இந்த வணிக வளாகம் தொடா்பான வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்) கவிநிலவு தனி அலுவலராகக் கடந்த வாரம் பொறுப்பேற்றாா்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், சாா் ஆட்சியா் பிறப்பித்த உத்தரவின்படி, பென்னிங்டன் கட்டடத்தை இடிக்கத் தீா்மானம் முன்மொழியப்பட்டது. ஆனால், நகா்மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, கட்டடத்தை இடிக்கும் தீா்மானம் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பென்னிங்டன் குழுவை நிா்வகிக்கத் தனி அலுவலரை நியமித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில், பழைய நிலையே தொடர வேண்டும் என உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டுள்ளது.
