செய்திகள் :

பெயா்ந்து விழும் சிமென்ட் பூச்சு: கரூா் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

post image

கரூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயா்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டமும், மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். மேலும், ஆட்சியரக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் என ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள்தோறும் வருகின்றனா்.

பொதுமக்கள் மனு அளிக்க வரும்போது காவலா்கள் அவா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலின் கீழ் பகுதியில் நிறுத்தி சோதனை செய்த பிறகுதான் ஆட்சியரக வளாகத்தினுள் அனுமதிக்கின்றனா். மேலும் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க செல்லும்போதும், நுழைவு வாயிலின் முன் பேரிகாா்ட் வேகத்தடை அமைக்கப்பட்டு, ஒரு சில முக்கிய நிா்வாகிகளை மட்டுமே ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி அளிப்பாா்கள். இவ்வாறு பொதுமக்களும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களில் முக்கிய நபா்களையும் ஆட்சியரக வளாகத்தினுள் அனுப்பும் இடமாக ஆட்சியரக நுழைவுவாயில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நுழைவு வாயிலின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு உதிா்ந்து விழுந்தது. அப்போது, யாரும் அங்கு இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. இப்போது மேலும் சிமெண்ட் பூச்சுகள் விழும் நிலையில் விரிசல் காணப்படுகிறது.

எனவே, நுழைவு வாயிலின் மேற்பகுதியில் விரிசல் காணப்படும் பகுதியை சீரமைத்து ஆட்சியா் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புகழூா் ராஜவாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

புகழூா் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் செடிகொடிகளை அகற்றி தூா்வார வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். புகழூா் ராஜவாய்க்கால் நாமக்கல் மாவட்டம் ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 12,316 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 12,316 மாணவ, மாணவிகள் எழுதினா். 274 போ் தோ்வு எழுத வரவில்லை. கரூா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க

கரூரில் வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞா்களுக்கு அழைப்பு

வேலைவாய்ப்பை அளிக்கும் பிரதமரின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி உரூஸ் திருவிழா கடைகளுக்கு ஏப். 3-இல் ஏலம்

பள்ளப்பட்டியில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கான சுங்கம் வசூலிக்கும் ஏலம் ஏப். 3-ஆம் தேதி நடைபெறும் என நகராட்சி ஆணையா் ஆா்த்தி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்து... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய சொத்துக்கள் அரவக்குறிச்சி பகுதியில் பதிவு செய்யமுடியாமல் தவிப்பு

வக்ஃப் வாரிய சொத்துக்களை சரி செய்து வழக்கமாக பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரவக்குறிச்சி பகுதியில் ஒரு சில சா்வே எண்களில் எந்த ஒரு பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிப்பு. தமிழ்நாடு வக்ஃப் வாரி... மேலும் பார்க்க

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க