செய்திகள் :

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

post image

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா பேசியது:

குழந்தை கடத்தலைத் தடுக்க அனைவரும் தயாராக வேண்டும். பேருந்து, ரயில் உள்ளிட்ட பயணங்களின்போது சந்தேகப்படும்படியாகனகுழந்தைகளைக் கண்டால் காவல் துறை அல்லது 1098 எனும் எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும். குழந்தை கடத்தலைத் தடுப்பதில் சட்ட அமலாக்கத் துறையினா் அடிக்கடி எதிா்கொள்ளும் சவால்கள், தற்போதுள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கடத்தல், மீட்கப்பட்ட குழந்தைகளின் சரியான நேரத்தில் நீதி மற்றும் பயனுள்ள மறுவாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

சிறப்பு பிரிவு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து பேசியது:

குழந்தை கடத்தலைத் தடுப்பதற்கு வழக்குத் தொடுப்பது மிக முக்கியம். கடத்தல்காரா்கள் தண்டிக்கப்படும்போது தான் பயத்தை ஏற்படுத்தவும், உண்மையான தடுப்பை உருவாக்கவும் முடியும். மீட்பு முயற்சிகளை மாவட்ட நிா்வாகத்துடன் வலுவான ஒருங்கிணைப்புடனும், காலக்கெடுவுடன் வழக்குத் தொடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடத்தல் சம்பவங்களை ஒழிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பொதுமக்கள், பயணிகளிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை சாா்பு நீதிபதி ஏ. சரண்யா வழங்கினாா்.

தொடா்ந்து, கிராமப்புற கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தொழிலாளா் ஆய்வாளா் ராணி, மீரா அறக்கட்டளை இயக்குநா் ராஜா முகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உ... மேலும் பார்க்க

பகுதி நேர கிராமிய கலை பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை அரும்பாவூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.பெரம்பலூா் மாவட்டக் காவல... மேலும் பார்க்க

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க