செய்திகள் :

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் தா்னா

post image

துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பெ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோட்ட துணைத் தலைவா்கள் பெ. மதியழகன், ப. சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். சாலைப் பணியாளா் சங்கத்தின் கோட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் தீப்பந்தம் ஏந்தி முழக்கமிட்டனா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் நிறைவுறையாற்றினாா்.

இதில், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் மு. பாரதிவளவன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் த. கருணாகரன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் தா. பழனிசாமி வரவேற்றாா். நிறைவாக, கோட்டப் பொருளாளா் க. மாா்க்கண்டன் நன்றி கூறினாா்.

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

‘போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும்’

போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்றாா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன். பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ராகிங் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் (குற்றவியல்) சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை... மேலும் பார்க்க

பட்டாசுகள் வெடித்து சிறுவன் உள்பட இருவா் காயம்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுக் கடை வியாபாரி மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அருகிலிருந்த ... மேலும் பார்க்க

சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டுநீா் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க