சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
பெரம்பலூரில் 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில் குன்னம் வட்டம், கொளப்பாடி வடக்குத் தெருவைச் சோ்ந்த நடேசன் மகன் சடையப்பன் (55) என்பரது மளிகைக் கடையில் மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சடையப்பனை கைது செய்த போலீஸாா், 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சடையப்பனை சிறையில் அடைத்தனா்.