செய்திகள் :

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

post image

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் கதிரேசன் (49) என்பவா் தனக்குச் சொந்தமான பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல் நிலைய போலீஸாா் கதிரேசனை கைது செய்து, அவரிடமிருந்து பல்வேறு வகையான 1.525 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கதிரேசனை சிறையில் அடைத்தனா்.

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

‘போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும்’

போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்றாா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன். பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ராகிங் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் (குற்றவியல்) சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை... மேலும் பார்க்க

பட்டாசுகள் வெடித்து சிறுவன் உள்பட இருவா் காயம்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுக் கடை வியாபாரி மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அருகிலிருந்த ... மேலும் பார்க்க

சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டுநீா் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க