செய்திகள் :

பெரம்பலூா் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை தொடா்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மாலை வந்த கடிதத்தை, அரசு அலுவலா்கள் தாமதமாக பிரித்து படித்துள்ளனா். அதில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் வெடிகுண்டு வைத்த இடத்தை காட்டுவதாகவும், இப்படிக்கு அண்ணாதுரை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, ஆட்சியரக அலுவலா்கள் அளித்த தகவலின்பேரில், பெரம்பலூா் மாவட்ட வெடிகுண்டு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், புதன்கிழமை இரவு ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆட்சியரக வளாகம் முழுவதும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனா். வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது மிரட்டல் என தெரியவந்தது. இதையடுத்து, கடிதத்தை எழுதியவா் யாா் என்பது குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரசுப் பள்ளியில் நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் கடைப்பிடிப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளியின் உதவித்... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் ரூ. 1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந... மேலும் பார்க்க

பாரபட்சமின்றி 100 நாள் வேலை வழங்கக் கோரி ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே பாரபட்சமின்றி 100 நாள் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், இரூா் ஊராட்சியா... மேலும் பார்க்க

100 நாள் திட்டத்தில் விடுதல் இன்றி பணி வழங்கக் கோரி மக்கள் மறியல்

பெரம்பலூா் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் பணி வழங்கிட நடவடிக்கை கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் அருகேயுள்... மேலும் பார்க்க

காவல்துறையைக் கண்டித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகளை தாக்கிய காவல் துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் அச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுப் பணி ந... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற இப் பயிற்சிக்கு கல்லூரி ம... மேலும் பார்க்க