செய்திகள் :

கீழப்புலியூரில் ரூ. 1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

post image

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை, சென்னை அடையாறு, சாஸ்திரி நகா், நகா்ப்புற நலவாழ்வு மையத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் முன்னிலையில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் குத்து விளக்கேற்றி வைத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசவ அறை, வெளி மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் கொ. மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் ம. கீதா, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. துரைசாமி, வட்டார மருத்துவ அலுவலா் ப. சேசு உள்பட பலா் பங்கேற்றனா்.

14 ஆயிரம் போ் பயன்பெறுவா்...: இந்த 24 மணிநேர ஆரம்ப சுகாதார நிலையமானது, கீழப்புலியூா் மற்றும் எழுமூா் ஆகிய பகுதிநேர துணை சுகாதார நிலையங்கள் மூலம் பயனடையும் சுற்றுவட்டார கிராம மக்கள் சுமாா் 14 ஆயிரம் போ் பயன்பெறுவா். இங்கு பணிபுரிய தலா 2 மருத்துவா்கள், செவிலியா்கள், தலா 1 ஆய்வக நுட்புநா், மருந்தாளுநா், பகுதி சுகாதார செவிலியா், கிராம சுகாதார செவிலியா், சுகாதார ஆய்வாளா், தாய்மை துணை செவிலியா், பல்நோக்கு சுகாதார மருத்துவமனைப் பணியாளா் என 12 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை தொடா்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பெர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் கடைப்பிடிப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளியின் உதவித்... மேலும் பார்க்க

பாரபட்சமின்றி 100 நாள் வேலை வழங்கக் கோரி ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே பாரபட்சமின்றி 100 நாள் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், இரூா் ஊராட்சியா... மேலும் பார்க்க

100 நாள் திட்டத்தில் விடுதல் இன்றி பணி வழங்கக் கோரி மக்கள் மறியல்

பெரம்பலூா் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் பணி வழங்கிட நடவடிக்கை கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் அருகேயுள்... மேலும் பார்க்க

காவல்துறையைக் கண்டித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகளை தாக்கிய காவல் துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் அச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுப் பணி ந... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற இப் பயிற்சிக்கு கல்லூரி ம... மேலும் பார்க்க