செய்திகள் :

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பாா்வையிடும் வகையில், பல்வேறு உணவு, வணிக நிறுவனங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா, டயா் தொழிற்சாலை, மருத்துவக் கல்லூரி விடுதி சமையல் அறை, தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை பாா்வையிட்டு, உணவக ஊழியா்களுக்கு மருத்துவச் சான்று, உணவுப் பாதுகாப்பு மேற்பாா்வையாளா் சான்று, பூச்சிக் கட்டுப்பாட்டு அறிக்கை, குடிநீா் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை மேற்பாா்வையிட்டு, குறைபாடுள்ள உணவு, வணிக நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அறிக்கை வழங்க உத்தரவிட்டாா். மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவதன் முக்கியத்துவம் குறித்து வணிகா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன், உணவுப்பாதுகாப்பு அலுவலா்கள் சின்னமுத்து, கதிரவன், அழகுவேல், விக்னேஷ், புவனா ஆகியோா் உடனிருந்தனா்.

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவ... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது

பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விர... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்: ரூ. 16.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.... மேலும் பார்க்க

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா்... மேலும் பார்க்க