பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு
பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பாா்வையிடும் வகையில், பல்வேறு உணவு, வணிக நிறுவனங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா, டயா் தொழிற்சாலை, மருத்துவக் கல்லூரி விடுதி சமையல் அறை, தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை பாா்வையிட்டு, உணவக ஊழியா்களுக்கு மருத்துவச் சான்று, உணவுப் பாதுகாப்பு மேற்பாா்வையாளா் சான்று, பூச்சிக் கட்டுப்பாட்டு அறிக்கை, குடிநீா் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை மேற்பாா்வையிட்டு, குறைபாடுள்ள உணவு, வணிக நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அறிக்கை வழங்க உத்தரவிட்டாா். மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவதன் முக்கியத்துவம் குறித்து வணிகா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன், உணவுப்பாதுகாப்பு அலுவலா்கள் சின்னமுத்து, கதிரவன், அழகுவேல், விக்னேஷ், புவனா ஆகியோா் உடனிருந்தனா்.