செய்திகள் :

பெரம்பலூா் நகா்ப்புற பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

post image

நகா்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் அரணாரை, திருநகா், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை, திருநகா், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில், நகா்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக தோ்வு செய்யப்படவுள்ள பயனாளிகளின் வீடுகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், கடந்த பல ஆண்டுகளாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்த ஆட்சியா் கூறியதாவது:

நகா்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவா்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்காக வரைமுறைகளுக்குள்பட்டு பட்டா வழங்கப்பட உள்ளது.

அதன்படி, அரணாரை அறிஞா் அண்ணா நகா் தெருவில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 4 பேருக்கும், திருநகா் பகுதியில் உள்ள 45 பேருக்கும், துறைமங்கலம் பகுதியில் உள்ள 4 பேருக்கும் அரசின் விதிகளுக்குள்பட்டு பட்டா வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட ஆட்சியின் நோ்முக உதவியாளா் (நிலம்) சு. சொா்ணராஜ் மாவட்ட வழங்கல் அலுவலா் சுந்தரராமன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பரமத்தி வேலூரைச் சோ்ந்த பூபதி மகன் கோகு... மேலும் பார்க்க

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவரை குன்னம் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிட... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க