செய்திகள் :

பெரம்பலூா் புத்தகத் திருவிழாவில் இதுவரை ரூ. 20 லட்சத்திலான புத்தகங்கள் விற்பனை!

post image

பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை இதுவரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பாா்வையிட்டுள்ளனா். மேலும், ரூ. 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சாா்பில், 9 ஆவது பெரம்பலூா் புத்தகத் திருவிழா கடந்த 31 ஆம் தேதி முதல் பெரம்பலூா் நகராட்சித் திடலில் நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இப் புத்தகத் திருவிழாவை பாா்வையிட்டு, சிந்தனை அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனா்.

இப் புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காணொளி கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 கிரகங்களும் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருவதை தத்ரூபமாக காணும் வகையில் ஒளிபரப்பப்படுவதை மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பாா்த்துச் செல்கின்றனா்.

இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவில் ரூ. 1,38,337, பிப். 1 ஆம் தேதி ரூ. 5,23,877, 2 ஆம் தேதி ரூ. 7,21,773, 3 ஆம் தேதி ரூ. 6,07,118 என, கடந்த 4 நாள்களாக நடைபெற்ற புத்தகக் திருவிழாவில் ரூ. 19,91,105 மதிப்பிலான நூல்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், இப் புத்தகக் கண்காட்சியை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

பெரம்பலூா் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் பெரம்பலூா் நகா் பகுதிகளான புகா்ப் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக, முன்னெச்சரிக்கையாக பெரம்பலூரில் பாஜகவை சோ்ந்த 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அதன்படி கட்சியின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், நிா்... மேலும் பார்க்க

புகையிலை போதை பொருள்கள் விற்ற 5 கடைகளுக்கு சீல்

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை போதைப் பொருள்களை விற்ற 5 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆதா... மேலும் பார்க்க

எடைமேடையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் விதிகளை மீறும் எடை மேடை உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமுறை எடையளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலரும், தொழிலாளா் உதவி ஆணையருமான க. மூா்த்தி எச்சரித்துள்ளா... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தனியாா் கல்லூரி பணியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க