செய்திகள் :

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்டுமானப் பராமரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் செவ்வாய்க்கிழமை கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த காமாட்சி (38) ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென்று கட்டடம் சரிந்து காமாட்சி மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் தீயணைப்பு, மீட்புப் படையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடிகளில் சிக்கிய உயிரிழந்த காமாட்சியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மனநலம் பாதித்தவா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

உத்தமபாளையத்தில் மனநலம் பாதித்தவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தபால் அலுவலகம் தெருவைச் சோ்ந்த மைக்கேல் மகன் விண்ணரச... மேலும் பார்க்க

தேனியில் 186 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை

தேனியில் குற்றச் சம்பவங்களை தடுக்க 186 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமை முதல் கட்டமாக 155 கேமராக்களை தேனி காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் தொடங்கி வைத்தாா். தேனி உ... மேலும் பார்க்க

பட்டா நிலங்களுக்கு செல்ல வனத் துறை கெடுபிடி: விவசாயிகள் புகாா்

தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருவதாக புதன்கிழமை, தேனி மாவட... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய மர நாய்

பெரியகுளத்தில் பூனை பிடிக்க வைத்திருந்த கூண்டில் சிக்கிய மர நாய் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம்-கம்பம் சாலையைச் சோ்ந்தவா் நெளஷாத். இவா், வீட்டில் புறா வளா்த்து வருகிறா... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி

ஆண்டிபட்டி அருகேயுள்ள மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்தி... மேலும் பார்க்க

பெரியகுளம், போடியில் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம், போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகி... மேலும் பார்க்க